Sunday, November 10, 2013

வேலைக்கு ஆகாது !



கிரிஷுக்கு தூக்கம் வர வில்லை.எப்போதும் போல . படபடப்புடன் கோபமும் கலவி கொண்டது.

" நீங்க என்ன பண்றீங்க ?"

" இப்ப ஹவுஸ் வைப் "

இந்த உரையாடல் ஒரு பத்து தடவை நடந்திருக்கும்  - ஒரே கேள்வி, பலர் கேட்டனர். ஒரே பதில், அவரின் மனைவியிடம், இரவு பார்டியில் .
பல பேர் கேட்டாலும் , பத்மினி கேட்ட போ'து சகிக்க வில்லை.அவள் அழாகாய் இருந்தாள். பத்து வருடம் முன்பும், கிரிஷுடன் காலேஜ் படிக்கும் போது.
***

வீட்டு பூட்டை திறந்து கொண்டே.. " உமா , அடுத்த மாசத்திலிருந்து நீ வேலைக்கு போற. நான் ஷ்ரவன்க் கிட்ட பேசறேன்.  " .

"ஷ்ரவன் .. டேய் , உமாவுக்கு வேலை வேணும் டா "

" இந்த ராத்திரியிலா?" . லேசாக , அரை நிர்வாண பெண் புலம்பல் கேட்டது .

***


காலையில் குடிக்கும் காபி அவன் முளையை தட்டியது .

" உமா .. நீ உன் சி.வி தயார் பண்ணு . வீட்டு வேலைகளை நாம ஷேர் பண்ணிக்கலாம் "

********

"ஷ்ரவன் .. சி.வி அனுபிச்சேன் வந்ததா "

"டேய் .. உனக்கு ஜாக்பாட் .. அவ ஹடூப் ல போன  வருஷம் கோர்ஸ் பண்ணா இல்ல .. இப்ப அதுக்கு செம டிமாண்ட். வருஷத்துக்கு பத்து வரும்டா கைல. அடுத்த வருஷம் உன்ன தாண்டிடுவா  "

 "ரொம்ப தாங்க்ஸ்டா .. அவ கிட்ட கேட்டு சொல்றேன் டா "

***
"என்னடா சொல்ற .. உனக்கு தான்டா கஷ்ட பட்டு உமாக்கு ஒருசினியர் பொசிஷன் வெச்சேன் "

" உன் கிட்ட சொல்றது என்னடா .. அவளுக்கு ரொம்ப நாளா  மூட் Swings இருக்கும் டா .. அப்ப அப்ப இது வேணும் அது வேணும் பா .. நானும் அவள ஏமாத்த கூடாதுன்னு ஏதாவது செஞ்சா  மாறுவான்னு ட்ரை பண்ணுவேன் "

***

இரவு பதினோரு மணி .

" ஷ்ரவன் என்ன சொன்னான் பா ?"

" அவன பத்தி பேசாத ..   அவனுக்கு  கிழ வேலை செய்யணுமா.. அவனுக்கு அடிமையா நீ இருக்கணும்ன்னு அவசியம் இல்ல "

அவனை பெருமையாய் பார்த்தாள்.   அந்த இரவை  அவனுக்கு பெருமை படுத்தினாள்.








No comments:

Post a Comment