கிரிஷுக்கு தூக்கம் வர வில்லை.எப்போதும் போல . படபடப்புடன் கோபமும் கலவி கொண்டது.
" நீங்க என்ன பண்றீங்க ?"
" இப்ப ஹவுஸ் வைப் "
இந்த உரையாடல் ஒரு பத்து தடவை நடந்திருக்கும் - ஒரே கேள்வி, பலர் கேட்டனர். ஒரே பதில், அவரின் மனைவியிடம், இரவு பார்டியில் .
பல பேர் கேட்டாலும் , பத்மினி கேட்ட போ'து சகிக்க வில்லை.அவள் அழாகாய் இருந்தாள். பத்து வருடம் முன்பும், கிரிஷுடன் காலேஜ் படிக்கும் போது.
***
வீட்டு பூட்டை திறந்து கொண்டே.. " உமா , அடுத்த மாசத்திலிருந்து நீ வேலைக்கு போற. நான் ஷ்ரவன்க் கிட்ட பேசறேன். " .
"ஷ்ரவன் .. டேய் , உமாவுக்கு வேலை வேணும் டா "
" இந்த ராத்திரியிலா?" . லேசாக , அரை நிர்வாண பெண் புலம்பல் கேட்டது .
***
காலையில் குடிக்கும் காபி அவன் முளையை தட்டியது .
" உமா .. நீ உன் சி.வி தயார் பண்ணு . வீட்டு வேலைகளை நாம ஷேர் பண்ணிக்கலாம் "
********
"ஷ்ரவன் .. சி.வி அனுபிச்சேன் வந்ததா "
"டேய் .. உனக்கு ஜாக்பாட் .. அவ ஹடூப் ல போன வருஷம் கோர்ஸ் பண்ணா இல்ல .. இப்ப அதுக்கு செம டிமாண்ட். வருஷத்துக்கு பத்து வரும்டா கைல. அடுத்த வருஷம் உன்ன தாண்டிடுவா "
"ரொம்ப தாங்க்ஸ்டா .. அவ கிட்ட கேட்டு சொல்றேன் டா "
***
"என்னடா சொல்ற .. உனக்கு தான்டா கஷ்ட பட்டு உமாக்கு ஒருசினியர் பொசிஷன் வெச்சேன் "
" உன் கிட்ட சொல்றது என்னடா .. அவளுக்கு ரொம்ப நாளா மூட் Swings இருக்கும் டா .. அப்ப அப்ப இது வேணும் அது வேணும் பா .. நானும் அவள ஏமாத்த கூடாதுன்னு ஏதாவது செஞ்சா மாறுவான்னு ட்ரை பண்ணுவேன் "
***
இரவு பதினோரு மணி .
" ஷ்ரவன் என்ன சொன்னான் பா ?"
" அவன பத்தி பேசாத .. அவனுக்கு கிழ வேலை செய்யணுமா.. அவனுக்கு அடிமையா நீ இருக்கணும்ன்னு அவசியம் இல்ல "
அவனை பெருமையாய் பார்த்தாள். அந்த இரவை அவனுக்கு பெருமை படுத்தினாள்.
No comments:
Post a Comment