1990 .
எப்படியோஒரு வழியாக பார்த்தாவை டாக்டருக்கு போவதற்கு கன்வின்ஸ் செய்து , இருவரும் தயாரானார்கள். தயாரான கூத்தை இங்கே படிக்கவும் .
இரவு நேரம் ஆகி விட்டதால் நாளைக்கு செலலாமென்று முடிவெடுத்தனர்.
மறு நாள் காலை. பார்த்தா உறங்கி கொண்டு இருந்தான் .
சுஜா : சீக்கிரம் எந்திரிங்க .. வர வர நீங்க நிறைய தூங்குறீங்க .. வேற எதாவது பிரச்சனையான்னு பார்க்கணும் .. ஒரு நாலு இட்லி சாப்பிட்டு டக்குன்னு ஹாச்பிடல்க்கு கிளம்புங்க ...
பார்த்தா : என்னடி இது கொஞ்சம் கோர்வையா சொல்ற .... உன் இட்லி சாப்பிடனும் , அப்புறம் ஹாஸ்பிடல் போகணும்ன்னு ..ஆமாம் அலாரம் என் அடிக்கல ? சரியா எழு மணிக்கு தானே வெச்சேன் !
சுஜா : ( electronic கிளாக்கை பார்த்து ) நாசமா போச்சு !
பார்த்தா : அதுவுமா ? கிளாக் உன் சமயல சாப்பிடாதே ?
சுஜா : வாய மூடுங்க ...நீங்க அலாரம் வெச்சது சாயங்காலம் ஏழு மணிக்கு
பார்த்தா : அப்ப, அது வரைக்கும் எப்படி தூங்கறது ? நீ கொஞ்சம் பேசிகிட்டு இருக்கியா ? அப்படியே தூக்கம் வந்துடும் .
சுஜா :ச் .. சீக்கிரம் பொய் பல் தேச்சு குளிச்சு ரெடி ஆகுங்க .. இன்னும் அரை மணி நேரத்தில கரண்ட் போயிடும்
பார்த்தா : ஏன்டி , நான் என்ன பல் கரண்ட் வொயர வெச்சா தேய்க்க போறேன் .. அதுக்கு எதுக்கு கரண்ட் ? உனக்கு சமையல் தான் தெரியாதுன்னு நெனச்சேன் .. இப்ப பொது அறிவும் ஆவ்ட்டா ?
சுஜா : அதுக்கு முன்னாடி தண்ணி நின்னு போகும் ..
பார்த்தா : அதான் ஒரு நாலு வாளி தண்ணி புடிச்சு வைக்க போறேன்னு சொன்னியே ....
சுஜா : அது எங்க அப்பாவுக்கு .. மத்தியானம் வருவாரு .. நாம இல்லாத போது அவர் கஷ்ட படக்கூடாதுன்னு புடிச்சி வெச்சு இருக்கேன் ..
பார்த்தா : நாம இல்லாத போது கஷ்டப்டரத பத்தி சொல்ற .. அவர் இருக்கிற போது நான் கஷ்டபடரத நான் யார் கிட்ட சொல்றது ? ... ( உள்ளே அந்த வாளிகளை பார்த்து விட்டு ) ஆமாம் . உங்க அப்பா என்ன அந்த தண்ணி வெச்சி நீச்சல் அடிக்க போறாரா ? எதுக்குடி இவ்வளவு தண்ணி ...
சுஜா :மசமசன்னு பேசாம சீக்கிரம் ஆக வேண்டியத பாருங்க ....
இப்படியாக பார்த்தா எழுந்து , குளித்து , ரெடியாக டின்னர் டேபிள் உட்கார்ந்தான் . சுஜா பார்த்தாவுக்கு ஒரு தட்டில் டிபன் எடுத்து வைத்தார்.
பார்த்தா : என்னடி இட்லின்னு சொன்ன , இது கொஞ்சம் தட்டையா இருக்கு ?
சுஜா : இது கல் தோசைங்க ..
பார்த்தா : நீ சொன்னதில பாதி கரக்ட் . கல்மட்டும்தான் .தோசைஅது இதுன்னு பொய் சொல்லாத .
சுஜா : உலகத்தில ஒவ்வருதரையும் போய் பாருங்க ..நிறைய பேர் சாப்பாடு இல்லாம கஷ்ட படறாங்க
பார்த்தா : நானும் அவங்கள மாதிரி தான் .. சாப்பாடு இருந்தும் கஷ்ட படறேன் . அவங்களுகாவது அன்ன தானம்ன்னு அது இது நல்ல சாப்பாடு கிடைக்கும் . எனக்கு தலைவிதி - இல்ல , நாக்கு விதி , அதே சாப்பாடு , மோசமான சாப்பாடு !
சுஜா : இப்ப சாப்பிடறீங்களா இல்லையா ? வேண்ணா உப்புமா பண்ணட்டுமா ?
பார்த்தா : நல்ல பேரு வெச்சாங்க உப்புமா , வெறும் உப்பு மட்டும் தாண்டி இருக்கு அதில .. ஏதோ கடல் தண்ணி கட்டி ஆகின மாதிரி ஒருபீலிங்.
சுஜா : சீக்கிரம் சாப்பிடுங்க ... அதுக்கு அப்புறம் தான் சுகர்க்கு நிறைய டெஸ்ட் எடுப்பாங்க ..
பார்த்தா : இத சாப்பிடமா போனா சுகர் மட்டும் தாண்டி வரும் . சாப்பிட்டா பீ.பி , அல்சர், கான்செர், இன்னும் புதுசு புதுசா வரும் - ஒரு நூறு ரூபா செலவு செய்ய வேண்டிய இடத்தில , ஒரு ஒரு லட்சம் செலவு செய்வோம் .
அப்போ டெலிபோன் மணி அடித்தது . சுஜா எடுத்தாள்.
சுஜா : யாருங்க அந்த பக்கம் ?
மறுமுனையில் : ஐயய்யோ , நீங்க போலீசா ?
சுஜா : இல்லப்பா .. நீ யாருப்பா ? வெளில இருந்து பேசுறியா ?
மறுமுனையில் : ஆமாம் மா . நேத்திக்கி தான் ரிலீஸ் பண்ணாங்க ... உடம்பு ஐஞ்சு கிலோ இறங்கி போச்சு .
சுஜா ( பார்த்தாவிடம் ) : என்னங்க , அந்த கடன்காரன் நட்டு தான் . உலகத்தில திருடன் கிட்ட , அதுவும் என் கிட்ட திருடினவன் கிட்ட பிரிண்ட்ஷிப் வெச்சுகிற முதல் ஆள் நீங்க தான் .
பார்த்தா : என்ன இருந்தாலும் , விரோதியோட விரோதி நண்பன்டி !
சுஜா : என்னது ?
பார்த்தா : இல்ல இல்ல , நான் விரோதின்னு சொன்னது நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர் மீசை முருகேசன !
பார்த்தா ( நட்டுவிடம்) : என்னபா கபாலி , எப்படி இருக்க ?
நட்டு : என் பேரு நடராஜன் கோபால் பா ..
பார்த்தா : என்ன பேருடா இது .. திருடன்னா ஒரு கபாலி , கோயிந்து அது மாதிரி இருக்க வேண்டாம் ? என்னமோ ஹிந்து பத்திரிக்கைக்கு லெட்டர் எழுதிற ஆள் மாதிரி இருக்கு உன் பேரு ..சரி சரி எப்ப உள்ள வந்த ?
நட்டு : வெளிய வந்தன்னு கேளுப்பா !
பார்த்தா : நீ மாசத்தில முப்பது நாள் ஜெயில்ல தான் இருக்க .. ஏதோ ஒண்ணுவிட்டு ஒரு மாசம் முப்பத்தியொரு நாள் வரும் பொழுது உனக்கு ஒரு நாள் லீவ் வரும் ... வெளிய வந்தா தாண்டா நீ உள்ள போவ .. அது விடு , நீ எப்படி இருக்க ?
நட்டு : என்ன பா சொல்றது , ஒரு அஞ்சு கிலோ குறைஞ்சு போச்சு பா !
பார்த்தா : எப்படி டா , இப்பவெல்லாம் , ஜெயில்ல அன்லிமிடெட் மீல்ஸ் போடறாங்கன்னு சொன்னங்க
நட்டு : அதுவெல்லாம் ஓகே பா , தூக்கம் கம்மி ஆகிடுச்ச ..
பார்த்தா : தூக்கம் வரலையா ? உனக்கு லவ் வர சான்ஸ் இல்ல - உலகத்தில இருக்கிற எல்லா பொண்ணுங்ககிட்டயும் திருடி இருக்க - பொம்பள போலிஸ் உட்பட ... நம்ம முதல் அமைச்சர் அம்மா கிட்ட மட்டும் இன்னும் திருடல ...அதுவும் அவங்க அப்பாயின்ட்மென்ட் கிடைச்சா அதுவும் செய்வ ! ஒரு வேளை ஜெயில்ல திருட ஆரம்பிச்சிடியா ? கன்டிநிவிட்டி இருக்கட்டும் பண்ணியா ?
நட்டு : ஆமாம் பா .. தெரியாதனமா என் ரூம் பேன் திருடி தொலைச்சிட்டேன் .
பார்த்தா : ஏன்டா , ஒரு கவனம் வேண்டாமா ? சரி , இனிக்கி எது உன்னோட ஏரியா ?
நட்டு : வேளச்சேரி மட்டும் சார் . முன்னாடி மாதிரி நிறைய இடம் போக முடியல ..
பார்த்தா : அட பாவமே , உடம்ப நல்லா பாத்துக்கோ ... நல்ல ஜாகிங் பண்ணு ...தேம்பா புஷ்டியா இருந்தா தானே தப்பிக்க முடியும் ?வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறுபா ...எவ்வளவுநாள் தான்செயின் திருடியே பொழப்பு நடத்துவ .... ஒரு சி.டி பிளையர் எது இதுன்னு மேல போக வேண்டாமா ?
இப்படி அவனுக்கு உபதேசம் செய்து விட்டு , போன்ஐ வைத்தான் பார்த்தா ..
பார்த்தா : பாத்தியாடி என்னோட சாமர்த்தியத்த , அவனோட பிளான் இனிக்கி தெரிஞ்சு போச்சு . நம்ம கண்டிப்பா அந்த பக்கம் போகாம இருந்த உன் தங்கதாலி பத்திரமா இருக்கும் . என்னோட ஆயுசும் ரொம்ப நாள் இருக்கும் .
ஒரு வழியாக , டிபன் முடித்து விட்டு , இருவரும் ஹாஸ்பிடல் போக தயாரானார்கள்.
No comments:
Post a Comment